விடை சொல் விநாயகா

விநாயகனே
வினைதீர்ப்பவனே

ஞானத்தின் முதல்வனே
வேத முதற்கோனே

அளவற்ற துதிகளை
அன்றாடம் பாடுகிறோமே

அள்ளி அணைத்து
அரவணைப்பாயா

இரக்க குணம் கொண்டு
இன்னல் நீக்குவாயா

கொரோனா பிடியில்
கொத்தாக மடிகிறோம்

இயற்கையும் செயற்கையும்
நித்தமும் வஞ்சிக்கிறது

மண்ணுக்குள் மடிகிறோம்
தஞ்சம் தேடி அலைகிறோம்

எண்ணற்ற இம்சைகள்
ஏட்டிலடங்கா துயரங்கள்

மானிட பிறவியே பாவமென
மதிகெட்டு நிற்கிறோம்

இரங்கற் பாக்களுக்கு
இலக்காகி நிற்கிறோம்

முழுமுதற் கடவுளே
முச்சந்தி நாயகனே

லஞ்சம் கொடுத்தால்
வஞ்சம் தீர்ப்பாயா

நெஞ்சம் கொண்டு
அச்சம் தீர்ப்பாயா

உடன்பிறப்பை ஏமாற்றினாய்
உலகத்தை சுற்றினேன் என்று

உயிர்களை ஏமாற்றுவாயா
உலகத்தை படைத்தேன் என்று

விடை சொல்வாயா
விற்பனை கடவுளே

எழுதியவர் : உமாபாரதி (23-Aug-20, 8:16 pm)
சேர்த்தது : உமாமகேஸ்வரி ச க
பார்வை : 64

மேலே