பொய்க்கவிதை

என் கவிதைகளனைத்தும் உள்ளடக்கிய
பொய்களேன வாயுரைத்தாய்

மொழிப்போர் புரியும் முனைப்பில் என்னை சீண்டி வம்பிழுக்கின்றாய்

நானும் பதிலுக்கு "பொய்கள் கவிதையின் அழகு" என மொழிந்தேன்

பொய்க்கோபம் பூண்டவள் "பின் எதற்கு அதில் என் பெயர்?" என்றாய்

காற்றின்றி சுவாசம் கொள்ள இயலுமா
பெண்ணே! என் கவிதையில் உன் பெயரின் தேவை அவ்வளவே...

எழுதியவர் : S.Ra (30-Aug-20, 8:42 am)
சேர்த்தது : Ravichandran
பார்வை : 205

மேலே