மயிலாட்டம்

மனமேகம் உணர்வு மழை பொழிய
மனமயில் காதல் நடம் புரிய
போர்வை ஏந்தி அல்ல காதல்
பார்வை ஏந்தி வந்தாள் அவள் !

---போர்வை என்றதும் மழையில் மயிலாட
குளிராதிருக்க மயிலுக்கு வள்ளல் பேகன்
போர்வை போத்திய இல்லை போற்றிய கதை
உங்கள் நினைவிற்கு வந்திருக்கும் .

எனக்கு கவிஞர் வாலியின் பாடல் வரிகளும்
நினைவுக்கு வந்தது .

மாதவிப் பொன்மயிலால் தோகை விரித்தாள்
வண்ண மையிட்ட கண்மலர்ந்து தூது விடுத்தாள்
காதல் மழை பொழியும் கார்முகிலாள்
இவள் காதலன் நானிருக்க பேரெழிலாய் ..

ஒரு கேள்வி :
இங்கே கவிஞர் வாலி பாடலில் பொன் மயிலால்
என்று சொல்லியிருக்கிறார் . பெண்மயிலால் என்றுதானே
சொல்ல வேண்டும் ?

எழுதியவர் : கவின் சாரலன் (2-Sep-20, 9:46 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 177

மேலே