காதல்

இமைகள் இளைப்பாற மறுக்கும்..
கனவிலும் வந்து போகும்..
கனவையும் கலைத்து விடும்..
காலை துயில் அறவே துறவும் ..
நீராடும் நொடி கூட நினைவில் வரும்..
முகம் கண்ணாடி நோக்க துடிக்கும்..
ஆடை மேல் நாட்டம் ஓடும்..
இடையிடை இடக்கரம் முன் தலை கோதும்..
உண்ணும் போதும் உலா வரும்..
மதிய தூக்கம் மறந்து போகும்..
குடும்பத்தினர் சூழ்ந்திடினும் தன்
எண்ணம் எங்கோ இருக்கும்..
பத்தும் பறந்து போகும்..
பட பாடல் வரிகள் வசியம் செய்யும்..
கற்பனை வளம் வலம் வரும்..
கவிதை எழுத கைகள் துடிக்கும்..
காத்திருப்பு பூரிப்பு தரும்..
பூக்கள் மீது மோகம் வரும்..
பிறந்த தேதி மனதில் நிற்கும்..
அன்பளிப்பு தேர்ந்தெடுக்க தடுமாறும்..
வாழ்த்து சொல்ல வாய் துடிக்கும்..
இடைவெளி ஏக்கம் தரும்..
மனம் எதையும் செய்ய துணியும்..
காதலிப்பவரை கண்கள் தேடும்..
கை கோர்த்து நடை பழகும்.
இவையாவும் தொடரும் என்றும்
காதல் கை கூடும் வரை...
------------
சாம்.சரவணன்

எழுதியவர் : சாம்.சரவணன் (2-Sep-20, 10:30 pm)
சேர்த்தது : Sam Saravanan
Tanglish : kaadhal
பார்வை : 288

மேலே