காதலின் பிதற்றல்

கனவிலும் வருகிறாய்

கண்ணெதிரிலும் தெரிகிறாய்

நிழலாகவும் வருகிறாய்

நிஜமாகவும் தெரிகிறாய்

மனதுக்குள் மலர்கிறாய்

மழயாகிக் கரைகிறாய்

உன் விழியாடும் உரைகளும்

உன் இதழ் கூறும் சொற்களும்

முரணாகவே உள்ளதே?

செவி கேட்கும் வார்த்தைகளும்

புவி பேசும் புரளிகளும்

செல்லவில்லை உள்ளகத்தே...

என் காதல் துயரங்களும்

நான்படும் துன்பங்களும்

யாரும் சொல்லவில்லையா உன்னிடத்தே?

எதிரிக்கும் வேண்டாம் இந்நிலை -எனப்

பிறர் சொல்லக் கேட்டிருக்கிறேன்

அதனைப் பிதற்றல் என்றேன்

பித்தாகிப் போகிறேன் , மொத்தமாக மாறினேன் ,

வானிலேறி பறக்கிறேன் , புதிதாக பிறக்கிறேன்

-இன்னும் ஏதேதோ கேட்டிருக்கிறேன் .

கோமாளிகள் என்றெ கேளிக்கை செய்தேன்

முற்பகல் செய்யின் பிற்பகல் வருமாம்

உணர்த்தியது காலம் உன் உறவினால்....

எழுதியவர் : moonchanta (3-Sep-20, 12:27 pm)
சேர்த்தது : தமிழ்தாரணி
பார்வை : 176

மேலே