மறு சீராய்வு மனு
உன் உள்ளம் என்ற
கோட்டையில்
இடம் வேண்டுமென்று
மனுதாக்கல்
செய்திருந்தேன்...! !
ஆனால்...
சரியான காரணம்
சொல்லாமல்...என்
மனுவை தள்ளுபடி
செய்து விட்டாய் ...! !
நீ என்னை
வேண்டாமென்று
சொன்ன பிறகும்.....! !
உன் நினைவுகள்
நிஜத்திலும் சரி
கனவிலும் சரி
என்னைவிட்டு
பிரியவில்ல....! !
எனவே
மறு சீராய்வு மனு
தாக்கல் செய்துள்ளேன்
இந்த முறை
நல்ல தீர்ப்பு
வருமென்று
காத்திருக்கிறேன்...! !
--கோவை சுபா