ஓரெழுத்து கவிதை நீ

ஆண் எனும் இரண்டெழுத்தின் முன்மாதிரி அவன் படைப்பு
அழகென்ற மூஎழுத்தில் அடக்க இயலாத சிறப்பு
மாவீரன் நான்கெழுத்து அவன் வாழ்வே அதன் விளக்கம்
நற்குணத்தின் ஐந்தெழுத்தில் செதுக்கிய ஒரு மனம்
பஞ்ச பூதம் எனும் ஆறெழுத்தும் படியும் அவன் அடியில்
ஏழுலகம் காணாத சோழனின் சிலை உருவடிவில்
எட்டி பிடிக்க எண்ணும் ஈசலுக்கு ஈசன் இடம் அறியவில்லை
ஒன்பது நவகிரிகம் சுற்றியும் உன் வரமில்லை இந்நாள் வரை
உன் உயர்வறிந்து உருகி உன்னிடம் இவள் வேண்டுவது
ஒரு முறை அண்டமும் மாறாத
உன்னிடம் என்னை சேர்ப்பதற்கு
விதியை மாற்ற இயலாத
உன்னை கண்டு உயிர் பிழைப்பதற்கு
உயிரென இருப்பதை நிருத்திவிடு
உன் உயிர் எனதில்லை என்று சொல்வதற்கு
படைத்தவன் நீயே பொறுப்பேற்று
உன் மகளை நீந்தி கரை ஏற்று

எழுதியவர் : தாமினி மு (6-Sep-20, 11:21 pm)
பார்வை : 231

மேலே