அடர்வான காதலாலே

ஊற வைத்த அரிசியாட்டம் நானிருக்கேன்
ஊறிப்போன உளுந்தாட்டம் நீயிருக்க
காதலென்னும் ஆட்டு உறவில் அறைபடுவோமா
காலமுழுதும் சேர்ந்திருக்க காவியமாக மாறுவோமா
அன்பென்னும் நெய்யை உருக்கி விட
ஆசையென்னும் நெருப்பை மூட்டிவிட்டு
அனுதினமும் நாமிணைந்து அணையாமல் காப்போமா
சிவந்த அழகு தேவதையே மனித உருவில் மாமணியே
பிறந்த பயனை நாமடைய பிணைந்து வாழ வேணுமாடி
அழகு காவியம் நம்மைப்பாட ஆளாய் நாமே இருப்போமா
ஆதித்தமிழில் தேர்ச்சிப் பெற்றோம் அகில மொழிகள் பல கற்றோம்
அடர்வான காதலாலே அழகு இலக்கியம் செய்திடலாம்.
------ நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (7-Sep-20, 10:35 am)
பார்வை : 59

மேலே