மோடி
பிரதமர் மோடிக்கு
பிறந்தநாள் வாழ்த்துக்கவி
உன் நேர்மை
கண்டு நாட்டு மக்களெல்லாம்
பூக்களைத் தூவினார்கள்
தமிழ் நாட்டு மக்கள் மட்டும்
வெறுப்புக்களைத் தூவினார்கள்
தன் மீது நெருப்புக்களை
தூவிக்கொள்கிறோம்
என அறியாமல்
பூக்களை நேசிக்கும்
பருவத்தில்
நீ மக்களைப் பற்றி
யோசித்தாய்
நீ
வெண் தாடி வேந்தன்
வெண் தாடியும் இருக்கிறது
நாட்டை ஆளும்
வேந்தனும் நீயே
நீ அணியும் காவி
காவி அல்ல
இந்திய முன்னேற்றத்தின்
சாவி
நீ தாமரையை
நாடெங்கும் மலரவைத்த
சூரியன்
நீ ஒரு தமிழச்சியை
ஆளுநராக்கி அழகு
பார்த்த இந்தியன்
நீ அரியணை
ஏற்றியது யாரை
உன் மீது போர் தொடுப்போரை
இவையெல்லாம்
அறியா சனங்கள்
உன் உண்மையான
உழைப்பிற்கு
நீ எங்கு சென்றாலும்
உனக்கே அறியாசனங்கள்
திரியனையில் ஏறிய
தீபம் ஒளி தருவதுபோல்
நீ அரியணை ஏரியபோதே
இந்தியா வெளிச்சம்
பெற்றது
நீ உறங்கும் பாய்
வாஜ்பாய்
நீ இந்த மண்ணை மணக்க
வைக்க ஒரு
பெண்ணை
மணந்து மணக்காதவன்
மாசற்ற மாணிக்கமே
நீ கண்ணசைத்தால்
சுற்றும் உலகம் நிற்குமே
தமிழகத்தின் குளம்
எல்லாம் தூர்
உன் கடைக்கண்
பார்வையை இங்கே
பார்
அத்தூரை சீக்கிரம் வார்
2021 ல் இங்கே நடக்கும் வார்
அதில் 234 தொகுதியையும்
நீயே வார்
நீ ஊராண்டும்
இப் பாராண்டும்
நூறாண்டும்
வாழ அன்போடு வாழ்த்துகிறேன்
கவிஞர் புதுவைக் குமார்
நிறுவனர்
உலக கவிஞர் சங்கமம்