அவளுக்கோர் கவிதை எழுத

உன்னழகிற்கோர் கவிதை எழுதிட சொற்கள்
என்று பலசொற்கள் தேடினேன் -தேடிய
சொற்கள் கையில் இப்போது இப்போது
உன்னைப் பார்க்க காணாமல் போனாய்நீ
கற்பனையில் உனைநிறுத்தி கவிதை எழுத
தொடங்க துயில் என்னை ஆட்கொண்டது
கனவில் நீயே வந்து சிரித்தாய் நான்
கையில் வைத்திருந்த சொற்கள் மாயமாய்
மறைவது போல கண்டேன் என்னருகே
உனைக்கண்டேன் என்னை அணைத்த வண்ணம்
இனிக்கவிதை எதற்கென்று உனைநான் தொட்டு
அணைக்க கனவு கலைந்தது ..... மீண்டும்
இப்போது நான் உன்தேடலில் உனக்காக
உந்தன் அழகிற்கோர் கவிதை புனைய

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (14-Sep-20, 3:29 pm)
பார்வை : 313

மேலே