பவித்திரம் இன்றி

தேடுகின்ற திரவியம் யாவும்
தினம் உண்ணும் உணவிற்கே
தடம் பதித்து செலவாயின்
கடைத்தேறுவது எப்படி

அறிவும் அகவுணர்வும் எந்நாளும்
எதிரெதிராய் நின்றே செயல்பட
அடக்க முடியாமல் அழற்சியுற்றால்
அவன் நிலை எப்படி

பெற்றோர்களின் பொதுத்தன்மை
பிள்ளைகளின் பால் வேறுபட்டால்
பிறந்தோர்களின் நிலையிலான
மனப்பாடு எப்படி

படிப்பும் பண்பும் காசுக்காய்
பவித்திரம் இன்றி சிதைந்து
பலரது நிலையை கேடாக்கினால்
பாரனில் வாழ்வது எப்படி

நிறைவடைந்த நிலையே இறையாம்
பிறை மனம் படைத்தோர் இறையாய்
பிதற்றுவது கண்டு பெருந்திரள்
கூடுவது தரணியில் எப்படி.
------ நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (16-Sep-20, 9:36 am)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 41

மேலே