காதல்

நேற்று என்னை அவள் பார்த்தபோது
கேட்டாள்'உனக்கு என்மேல் காதல்'
என்கிறாயே அந்த காதலுக்கு ஒரு
உரு தந்து என்னிடம் தூது அனுப்பமுடியுமா
என்று கேட்டாள்...... அப்போது ஒன்றும் பேசாது
சென்ற நான் இன்று அவளிடம் என்காதலை
உருத்தந்து தூது அனுப்பினேன் ......
அதுவே அந்த ஒற்றை சிவப்பு ரோசா
அதில் நான் ஒட்டிவைத்த கடிதத்தில்
'இதுவே நீ கேட்ட என் காதல்
இதற்கு அழகுண்டு , உரு உண்டு, வாசம் உண்டு
உன்னைப்போல' பெற்றுக்கொள்வாயா 'என்று
என் மனதை திறந்திருந்தேன்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (17-Sep-20, 4:20 pm)
Tanglish : kaadhal
பார்வை : 294

மேலே