கண்ணாடியில்

கால் கடுக்க மணிக்கணக்காய்
காத்திருப்பு
அவளுக்காய் மரநிழலில்
வாட்டத்துடன் அவன்
வந்து கொண்டிருக்கும் அவள்
வேக வேகமாய்
தனக்காக அவன் இப்படியா /,
தவித்து விடுகின்றாள்
அவனுக்குநான் எனக்கு அவன்
எழுதி விட்டான் இறைவன்
இதுதான் தெய்வீகக் காதல்
அவனருகே அவள் வந்து
நின்றதை பார்த்து
அவன் கண்கள் கலங்கி விட்டது,
நான்தான் வந்துவிட்டேன் பின் ஏன் /
அவனை ஆசுவாசப்படுத்தினாள் ,
இதுதான் உண்மை காதல்
காதல் இதயத்தின் கண்ணாடி
ஒருவரை ஒருவர் ஒருவரில் பார்க்க
காதலே கண்ணாடி

எழுதியவர் : பாத்திமாமலர் (17-Sep-20, 7:34 pm)
சேர்த்தது : பாத்திமா மலர்
Tanglish : kannadiyil
பார்வை : 255

மேலே