அவள் பேசிய முதல் மொழி

இன்முகம் காட்டி ஒரு
புன்சிரிப்பிலேயே மௌனமொழி
பேசியே என் இதயத்தில் வந்தமர்ந்த
என்னைக் கட்டிப்போட்ட இவள்
மௌனம் கலைந்து பேசினால் என்னோடு
எம்மொழியில் பேசுவளோ என்று
நான் எண்ணி முடிக்கையில் காற்றில்
மிதந்து வந்தது அவள் வாய்திறந்து பேசிய
அந்த முதல் பேச்சு 'அன்பே என்னாருயிரே
இன்றுமுதல் நீ என்னவன் என்னவனே ;
என்ற கனிந்துருகும் தேன் மொழி
தமிழ் மொழி...... ஆஹா இவள்
தமிழினி அல்லவா .... என்று நினைக்கையில்
நிலவின் குளிர் வந்து நிறைத்தது
அவள் மோனம் களைந்து பேசிய
அந்த முதல் மொழி

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (18-Sep-20, 2:28 pm)
பார்வை : 248

மேலே