காவிய நாயகி
கனவில் வந்த காரிகையை மறக்க முடியாது
மனதிலேயே அவளை வரித்து பூஜித்து
கவிஞன் நான் காவியம் தீட்டினேன்
அதைக் கொண்டு அவளை அர்ச்சித்தேன்
நித்தமும் காவிய பாக்களால் பாடிமகிழ
என்னையே நம்ப முடியவில்லை இன்று
நான் பாடிமகிழ்ந்த என் பாடலின்
ஒலிஅலைகள் உயிர்க்கொண்டு என் கனவு
காரிகையாய் என்முன்னால் வந்து நின்றாள்
கேட்டது கிடைத்ததுபோல்