அவள் விழிகள்
செந்தாமரை முகமாக அதில்
உன் விழிகள் கண்டேன் துள்ளும்
கயலாக தாமரையில் மதுவருந்தும்
கருவண்டாய் கண்மணிகள் அங்கு
பட படத்து சிறகை மூடி திறக்கும்
பட்டாம் பூச்சிபோல் உன் இமைகள்
இப்படி கதைகள் பல பேசும் உந்தன்
விழிகளின் எழிலுக்கு வையகத்தில்
ஏது இணை நானறியானே கண்ணம்மா