முகநூல் பதிவு 112

விடியல் வரும்முன்னே
வினைகள் சிந்தையில் வரிசைக்கட்டி...
வேகத்துடன் விவேகமாய் செயல்பட
விழித்திரைக்குள் வியூகம் விரிகிறது .....
வைராக்கியமும் வீரியமும் சுரக்கிறது...
விவரங்கள் தேடிமனம் விரைகிறது....
வழியும் தானாய் பிறக்கிறது......
வாஞ்சையுடன் களம் கண்டால்....
வெற்றி நம் பக்கம் குவிகிறது.....



கவிதாயினி அமுதா பொற்கொடி

எழுதியவர் : வை.அமுதா (20-Sep-20, 5:03 pm)
பார்வை : 60

மேலே