ராதையும் ஷ்யாமமும்

நடந்துவரும் தங்கப்பதுமையென அவள்
நடந்துவந்தாள் இப்போது அவனருகே அவள்
இருண்ட நெடிய உருவம் அவள் தேடியடைந்த
அவளின் அந்த அவன்.... ஹா ஹா இதுவென்ன
வினோதம் நான் காண்பது தங்க நிறத்தால் அவள்
எப்படி ' சியாமளையாய்' காண்கிறாள் அங்கு
கரிய அவள் காதலன் நிழலில் அவள் இது
தொடரும் நிழல் அவன் நிழலில் அவள்
அவன் உருதான் கார்மேகம் நிழலும்
ஆனால் அவன் உள்ளமோ பாலன்ன வண்ணம்
ராதையும் ஷ்யாமும் போல இந்த காதல் ஜோடி

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (21-Sep-20, 8:42 pm)
பார்வை : 89

மேலே