உறவியாய் உழைத்து உயர்வோம்

குரம்பையிலோ கோபுரத்திலோ வாழ்ந்திடிணும்
அல்கல் அதிகாலை ஆர்வமுடன் துயலெழுந்து மூழ்கி
காழகம் வெளுத்து தூய காழகத்தை அழகாய் உடுத்தி
திரவமோ திண்மமோ உணவை அளவோடு அயின்று
உற்சாக ஓர்வால் ஒரு நிலையில் உறவியாய் உழைத்து
சிறு குழந்தைக் கட்டும் சிற்றில் போல தொடங்கி
பலமாய் பல்வேறு தடங்களைக் கடந்து திமிறி
அசும்பில் விழுந்து அசுத்தம் அறிந்து தெளிந்து
பகல் முதல் கல்குல் வரை பாடுuட்டு திரவியம் சேர்த்து
அத்தம் அதனை சகடத்தால் கடக்கும்போது
கயவர்கள் சூழ்ந்து திரவியத்தை அபகரிப்பதைப்போல்
கவ்வை கூறும் கொவ்வை வாயினருக்கு அஞ்சி
செம்மை பணி செய்தால் ஏற்றம் இஞ்ஞாலத்தே.
-------- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (21-Sep-20, 10:06 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 80

மேலே