இடையினைப் பற்றிக் கொண்டு

மல்லிகைப் பூச்சூடி மருதாணியால் அலங்கரித்து
மயக்கும் மணப்பொடியால் அங்கத்தை மணமாக்கி
அந்திக் கதிரவன் அடங்கும் போது அற்புத தென்றல்வீச
பொன்மாலை பொழிதினிலே வானம் பன்னீர்தெளிக்க
அழகு மயிலால் அருகினிலே அடவு நடையில் வந்தாளே
இடையினைப் பற்றிக் கொண்டு இன்ப முத்தத்தை
அடிவயிற்றில் பதிக்கையிலே அல்லலால் அவதியுற்றாள்
பற்றிய கரங்கள் இரண்டும் பதமாக மேலேற
சுற்றிய அரவமாக என் தடத்தோளில் சரிந்து துவண்டாள்
கன்னத்தின் கதகதப்பு கனலினை என்னுள் மூட்ட
காதலின் கடைசி நிலை காமத்தீயால் கட்டுண்டேன்.
-------- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (23-Sep-20, 11:17 am)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 93

மேலே