மனதில் எழும் அலைகள்

கடல் அலைகள்
ஆர்ப்பரித்து எழும்
ஆனால்.....ஆழ்கடல்
அமைதியாக இருக்கும்

அதுபோல் நம் வெளி மனம்
ஆர்ப்பரித்து அலை போல் எழும்
உள்மனம் ஆழ்கடல் போல்
அமைதியாக இருக்கும்.

கடற்கரைக்கு சென்றால்
எவ்வளவு இரைச்சலாக
இருந்தாலும் ஆர்ப்பரிக்கும்
கடல் அலைகளை பார்க்க பார்க்க
நம் மனதில் இரைச்சலோடு
ஆர்ப்பரிக்கும் கவலைகளும்
குறைந்து மனம் அமைதி பெறும்..!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (25-Sep-20, 10:42 am)
சேர்த்தது : கோவை சுபா
பார்வை : 144

மேலே