முகநூல் பதிவு 118

நீடு துயில் நீக்கப்
பாடிவந்த பாடுநிலா....
நீண்ட துயிலுக்குச் சென்ற செய்தி
பேரதிர்ச்சியை தருகிறது....

பல கோடி இதய நாளங்களில் அதிர்ந்து
இயக்கத்தை சீராக்கிய இதமானக் குரல்....
இன்பத்திலும் துன்பத்திலும் வருடிய இனிய குரல்....
பலரது தனிமை பொழுதுகளை தழுவியக் குரல்....
பல காதலர் நெஞ்சில் இழைந்து உருகவைத்தக் குரல்....
மூன்று தலைமுறை செவிகளில் ரீங்காரமிட்டக் குரல்....
இதோ இன்றோடு அடங்கிப்போனது.....

பாடு நிலாவே...!
இறைவனிடம் உனக்காய் கையேந்தினோம்
இறைவன் எங்களிடம் கையேந்தி உன்னைப் பெற்றுக் கொண்டான்.....
என் செய்வோம்....?

சென்று வா என்னுயிர் ஆண்குயிலே...
ஏழு ஸ்வரங்கள் இனி உன்னைப் பாடிக் கொண்டே இருக்கும்.....
உன் குரலை இனி குயில்களும் பிரதிபலிக்கும்
காற்றலைகளால் அவை முகடுகளில் மோதி
உலகம் உள்ளவரை அது எதிரொலிக்கும்....

என் இதய அஞ்சலி 😭😭😭😭😭😭😭

எழுதியவர் : வை.அமுதா (25-Sep-20, 5:23 pm)
பார்வை : 64

மேலே