முகநூல் பதிவு 119
ஒரு மனிதன் இறந்தவுடன்
அவன் ஆன்மா புனிதமடைந்து விடுகிறது...
கசடுகளுடன் கூடிய தங்கம்
நெருப்பில் இட்டவுடன்....
எரிந்து உருகி தூய்மை அடைவதைப்போல்.....
மானிடர் ஆன்மா மரணம் கொள்ளாது...
அதன் பாவ புண்ணியக் கணக்கிற்கு ஏற்ப
மீண்டும் மீண்டும் பிறவி எடுக்கும் என்கிறது கீதை....
ஆன்மா புனிதமானது என்றால்....
அதன் பாவ புண்ணிய கணக்குகள் ஏழேழு பிறவியிலும் ஏன் தொடர வேண்டும்.... ?
எனக்குப் புரியவில்லை....
தெரிந்தவர்கள் விளக்குங்களேன்....