புன்னகைக்கு அந்நியமாய்

ஓரவிழிப் பார்வை ஓரங்க நாடகத்தில்
உலகை வெல்லுவாய் கொல்லுவாய்
ஒளிரும் புன்னகையை இன்று ஏன் ஓரம் கட்டினாய் ?
காவிய நாயகியே ஓவியப் பதுமையே
ஆவியைக் கொல்லாதே
புன்னகைக்கு அந்நியமாய் நிற்காதே !

எழுதியவர் : கவின் சாரலன் (26-Sep-20, 10:40 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 90

மேலே