மறக்கமுடியலையே
என்னை மறந்துவிடு என்று அவனிடம்
நான் சொல்லிவிட்டு வந்தபோதிலும்
என்பாவி மனது அவனை மறக்க
தெரியாது தவிக்கிறதே காதலால்
விரகதாபம் என்றால் காலத்தால் அழியும்
அவன்மீது நான் கொண்டது காதல்
என்னுடல் உள்ள வரை மாறாது