நீயும் இறைவனும்
துன்பம் நேருகையில் இறைவா
ஏந்தானோ சோதிக்கிறாய் என்று
புலம்பும் நீ கொஞ்சம் யோசித்துப்பார்
நித்தம் நித்தம் இறைவனை உன் செயலால்
சோதிக்கிறாயே தாயை அலைக்கழிக்கும்
பொல்லாத சேய்போல இறைவன் கொஞ்சம்
தட்டினாலும் நீ தாங்க மாட்டாய் இதைப்
புரியவைக்கவே சோதிக்கிறான் இறைவனும்
உன்னை அறிந்திடு நீயும் மனமே