மாறுவானா
குஞ்சுகளுக்கு இரைதேடிய
பறவை
கூட்டை நாடி வந்தது..
நெடுந்தூரம் பறந்த
களைப்பிலும் விட்டது
நிம்மதிப் பெருமூச்சு-
கூடிருக்கும்
மரம் இருக்கிறது
மனிதனால் வெட்டப்படாமல்..
முன்பு
கூட்டோடு குஞ்சுகளோடு
மரம் வெட்டப்பட்டது
மறக்கவில்லை பறவைக்கு,
மனம் குமுறுகிறது
மனிதனை நினைத்து..
மனிதன் ஏன் இப்படி
மாறிவிட்டான் இப்போது-
தன்னினம் அழிக்கிறான்,
தாயாய் உதவும்
இயற்கையை அழித்து
எங்களை வாட்டுவதுடன்
தனக்கும்
தேடுகிறான் கேடு..
மாறுவானா மனிதன்...!