நாத்திகன்

மேடைப் பாடகன் அவன்
இன்னும் மணமாகாதவன்
இறைவன் இல்லை
என்பவன் அவன் .... நாத்திகன்
இதோ கேட்போர் காதில்
இசை மழை புரிகின்றான் ....
' மனைவி அமைவதெல்லாம்
இறைவன் கொடுத்த வரம்'
மனதில் அவன் நாத்திகன்....
இறைவன் .... அவனுக்கு
அவனை நிந்திப்பார் மீது கூட
அன்பே அன்புதான் .....பொழிவான்
அந்த பாடகன் மீது அன்பு பொழிந்தார்
இறைவன் வரமாய் அவன் கேட்காமலே
அழகு மனைவி வந்தமைத்தாள்
அவன் கேட்காமலே

அன்று பாலகனாய் கண்ணபெருமான்
தன்னைக் கொல்லவந்த பூதனை தனத்தில் தாங்கிவந்த விடமனைத்தும்
குடித்தான் .... அவள் மயங்க
அக்கணமே தீயவளுக்கு
மோட்சம் கிட்டியது !

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (28-Sep-20, 7:30 pm)
Tanglish : naththigan
பார்வை : 91

மேலே