வாழ்க காந்தி மகான்

"நமக்காக பிறந்தார் காந்தி!
அவரின்றி நமக்கேது இன்று சாந்தி ?

விடை தெரியா பாதையிலே,

நடையாய் நடந்து,
தடைகள் பல கடந்து,

மடை திறந்த வெள்ளமென,
பகட்டு உடை துறந்த உள்ளம் என,

நாம் சுதந்திரக் காற்றை சுவாசிக்க,
தூற்றுவாரையும் நேசிக்க,

அஹிம்சையை போதித்தார்!
'அன்பு வழி 'அது ஒன்றையே யோசித்தார் ,

நம்மிடையே ஒற்றுமையை ஊட்டி
வந்தார்,
நமக்கான சுதந்திரத்தையும் ஈட்டி
தந்தார்,

ஆம்!. மகாத்மா வென்றார்!

ஆனால், என்ன ஒரு கொடுமை!

அவரையும் தொலைத்தது குண்டு,

என்ன செய்ய ?

மகாத்மாக்கள் மட்டுமல்ல,
பாவாத்மாக்களும் இப்பூமியில் பிறப்பது உண்டு .

இனியாவது எடுப்போம் இந்நந்நாளில்

கண்ணான ஒர் உறுதி,
வருங்காலம் பொன்னாக
மாற கருதி,

நாம் மகாத்மாவாக வாழ
முடியா விட்டாலும்,
பாபாத்மாக்கள் உருவாகமல்
காக்க முயல்வோம்.


பெருகட்டும் காந்தி அடிகளின் பெருமை!
உணரட்டும் இவ்வுலகம் என்றும்
அவர்தம் "மேன்மை".

எழுதியவர் : Lakshya (1-Oct-20, 10:19 am)
சேர்த்தது : லக்க்ஷியா
பார்வை : 452

மேலே