வாழ்க காந்தி மகான்
"நமக்காக பிறந்தார் காந்தி!
அவரின்றி நமக்கேது இன்று சாந்தி ?
விடை தெரியா பாதையிலே,
நடையாய் நடந்து,
தடைகள் பல கடந்து,
மடை திறந்த வெள்ளமென,
பகட்டு உடை துறந்த உள்ளம் என,
நாம் சுதந்திரக் காற்றை சுவாசிக்க,
தூற்றுவாரையும் நேசிக்க,
அஹிம்சையை போதித்தார்!
'அன்பு வழி 'அது ஒன்றையே யோசித்தார் ,
நம்மிடையே ஒற்றுமையை ஊட்டி
வந்தார்,
நமக்கான சுதந்திரத்தையும் ஈட்டி
தந்தார்,
ஆம்!. மகாத்மா வென்றார்!
ஆனால், என்ன ஒரு கொடுமை!
அவரையும் தொலைத்தது குண்டு,
என்ன செய்ய ?
மகாத்மாக்கள் மட்டுமல்ல,
பாவாத்மாக்களும் இப்பூமியில் பிறப்பது உண்டு .
இனியாவது எடுப்போம் இந்நந்நாளில்
கண்ணான ஒர் உறுதி,
வருங்காலம் பொன்னாக
மாற கருதி,
நாம் மகாத்மாவாக வாழ
முடியா விட்டாலும்,
பாபாத்மாக்கள் உருவாகமல்
காக்க முயல்வோம்.
பெருகட்டும் காந்தி அடிகளின் பெருமை!
உணரட்டும் இவ்வுலகம் என்றும்
அவர்தம் "மேன்மை".