நமக்கு பாதுகாப்பு தேவை

திருடர்கள் கூட்டமைப்பு செயற்குழு கூட்டத்தில்:
அண்ணே நம்மள மாதிரி ரவுடிகங்கள ஒழிச்சுக்கட்டப் போறாங்கலாம்.
@@@@@@
யாருடா மண்டையா சொன்னது?
@@@@@@@@@
செய்தில சொன்னாங்க அண்ணே.
@@@@@
அப்ப நாம தகுந்த பாதுதாப்பபைத் தேடிக்கணும்டா பசங்களா.
@@@@@@
என்னடா மூக்கையா கையத் தூகாகற?
@|@@|@|
ஒரு முக்கிய விசயம் சொல்லனும் அண்ணே.
@@@@@
ஒரு புதுக்கட்சி. ஒரு தொகுதில ஆயிரம் உறுப்பினர்கள்கூட இல்வையாம். அந்தக் கட்சிக்கு யாரு போனாலும் சேத்துக்கறாங்கலாம்.நல்லா கவனிக்கிறாங்களாம். கட்சில ஒரு பதவியும் தர்றாங்களாம். நம்மள மாதிரி ரவுடிங்களுக்கு முன்னுரிமை குடுக்கறாங்களாம்.
@@@@@@@
அப்பறம்?
@@@@@@@
நூறு துணைத் தலைவர்கள், ஐம்பது செயலாளர்கள். ஒரு மாவட்டத்து முப்பது மாவட்ட தலைவர்கள், முப்பது மாவட்டச் செயலாளர்கள். இது மாதிரி ஏராளமான பதவிகளை உருவாக்கறாங்களாம். நீங்க ஐயாயிரம் ரவுடிங்கங்களுக்குத் தலைவரா இருக்கறீங்க. உங்களுக்கு நிச்சயமா மாநிலத் துணைத் தலைவர் பதவி கிடைக்கும் அண்ணே. கார் தருவாங்க.
@@@@@@
ரண்டு பேரும் நல்ல தகவலைச் சொன்னீங்கடா. நாளைக்கே அந்தக் கட்சில சேந்து உறுப்பினர் அட்டை, பதவி அட்டை எல்லாம் வாங்கிட்டா இனி நம்மள யாரும் ஒண்ணும் செய்யமுடியாதுடா. நாமளும் கட்சித் தலைமை கட்டளையிட்டா மட்டும் ரவுடித்தனம் செய்வோம்.
@@@@@@
சரி வருமானம்?
@@@@!
(மண்டையன்): அண்ணே கட்சி நமக்கு போதுமான வாரச் சம்பளம் குடுக்கும்.
@@@@@@
அது போதும்டா மண்டையா. நம்ம உயிரைக் குடுத்தாவது கட்சியை வளரச் செய்வோம்.
@@@@@
எல்லாம்:: அண்ணன் வழி நடப்போம். பாதுகாப்பாக வாழ்வோம்.

எழுதியவர் : மலர் (2-Oct-20, 7:43 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 115

மேலே