இதை யாரும் படிக்க வேண்டாம்

அழிக்காதே! அழிக்காதே!
விவசாயத்தை அழிக்காதே!

கார்ப்பரேட் முதலாளியிடம்
கையேந்தி நிற்காதே!

பாரதத்தின்
முதுகெலும்பு விவசாயம்
அதை உடைச்சிட்டா நிற்காதே!

உங்கள்
அரசாங்கம்

அவர்கள்
சேற்றில் கைவைத்தால்
நீ சோற்றில் கைவைப்பாய்
மறவாதே!

சோறுபோடும்
தேய்வத்தை சோதிக்காதே
தெய்வம் கோபம் கொண்டால்
நாடு தாங்காதே!

வள்ளலார்
சொன்னார் வாடிய பயிரை
கண்ட பொழுதெல்லாம்
வாடினேன் என்றார்

இன்று விவசாயிகள்
வாடிய பயிரை கண்ட போழுதெல்லாம் உயிரை விட்டான்

வள்ளலார்
மிஞ்சும் விவசாயிகள்

யானைகளை
கட்டி ப்போரடிச்சி சோறு போட்ட
புண்ணிய பூமியில்

ஒரு வேளைச்சோற்றுகு
கையேந்தி நிற்பதா?
என் கொடுமையோ!

இதை கண்ட
உள்ளமும் உறைந்தது
இரத்தம் கொதிக்கிறது
இதயம் வெடிக்கிறது

சோறு போடும்
தெய்வத்திற்கே சோதனைய

தெய்வத்தை
சோதிக்காதே இவ்வுலகம்
தாங்காதே!

எழுதியவர் : துரைராஜ் ஜீவிதா (5-Oct-20, 7:33 pm)
சேர்த்தது : துரைராஜ் ஜீவிதா
பார்வை : 149

மேலே