விலை

என் அனுபவங்கள் எல்லாம்

யார் சொல்லியும் கேளாது
சுயமாய் நான் கற்றவை

என்ன இழப்புகள் தான்

நான் கொடுத்த விலை

யாருக்கும் நான் சொல்வதை
கேட்கும் பொறுமையில்லை

கவனித்துக் கொண்டு தான் இருக்கின்றேன்

மனம் மட்டும் அடித்துக்கொள்கிறது
அவர்கள்

என்னைப்போல எதையும் இழந்து விடக்கூடாதென்று

எழுதியவர் : நா.சேகர் (13-Oct-20, 5:49 am)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : vilai
பார்வை : 191

மேலே