பூவையின் சிரிப்பா பூவின் அழகா

முல்லைக்கொடி பூத்து குலுங்கியிருக்க பூப்பறிக்க
எல்லையில்லா அழகு மலராய் வந்தவளே
நீ சிரிக்க அதைக்கண்டு முல்லையும் நாணியதே
அதைக்கண்டு புரியாமல் நானும் பார்த்து
மகிழ்ந்தேன் பூவே உன்சிரிப்பு அழகா
இல்லை பூத்துக்குலுங்கும் அந்த முல்லையா
நீயே சொல்லடி கண்மணி.

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (21-Oct-20, 7:40 am)
பார்வை : 110

மேலே