சஷ்டியப்தபூர்த்தி

சஷ்டியப்தபூர்த்தி


நேரிசை வெண்பாக்கள்

உத்திர மேரூர் பொருந்தியப் பெற்றோர்கள்
பத்மநாப அன்னக் கிளியுமாம் -- சொத்தென
விஞ்ஞானி பன்னீர்செல் வத்தையும் ஈன்றிட
விஞ்சையில் சேர்ந்தார் பணி


அசுவினி தெய்வமருந் துப்படை சேர்ந்து.
விசுவாச சேவைபல செய்தார் -- பசுங்கொடி
யாளாம் விஜியை மணந்து சிறந்தாரே
ஆளாய் உலகவாழ் வில்


ஆனந்த வாழ்வில் மகன்மனோகர் டாக்டரானார்
ஆனந்த சேவைமுடித் தோய்வானார் -- ஆன
பலவுதவி செய்தார் கடக்கிறார் ஆண்டு
நலமாய் அறுபதைவாழ்த் தும்


...

எழுதியவர் : பழனிராஜன் (31-Oct-20, 6:18 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 136

மேலே