நம்பிக்கை

போராடிக் கொண்டே இரு...
உன்னை பிறர் பார்க்கப் போராடாதே ...
உன்னை பார்த்த பலர் போராட வேண்டும் ...
அதுவரை போராடிக் கொண்டே இரு.

ஓடிக் கொண்டே இரு...
உன்னுடன் ஓடி வருபவர்களை பார்க்க ஆசை படாதே...
உன்னுடைய இலக்கை அடைந்த போது திரும்பி பார்...
அங்கே கிடைக்கும் உன் ஓட்டத்திற்கான விடை.

ஆட்டு மந்தையில் ஆடாக இருந்து விடாதே..
ஒரு ஜான் வயிற்றுக்காக உன்னை விற்று விடாதே...
பாறையின் இடுக்கில் விழுந்த எச்சத்தில் ஆலமரமே வரும் பட்சத்தில்..
உன்னை வெல்ல நிச்சயமாக இந்த உலகத்தில் ஆளில்லை.. என்ற நம்பிக்கையில் வாழ கற்றுக்கொள்.
சிறிது கடினமாக இருந்தாலும்..
பறவையை போல மேடு பள்ளம் இல்லாத வானத்தில் வட்டமிட்டு... உன் வாழக்கையை சிறகடித்து பறந்து செல்.

எழுதியவர் : தமிழன் சாரதி (3-Nov-20, 12:40 pm)
சேர்த்தது : தமிழன் சாரதி
Tanglish : nambikkai
பார்வை : 1897

மேலே