மீனும் மனிதனும்
தண்ணீரில்
துள்ளி திரிந்த மீன்
தூண்டில் புழுவுக்கு
ஆசைப்பட்டு
தூண்டிலில் சிக்கி
கண்ணீர்விட்டு அழுது
தரையில் இறந்தது... !!
அதுபோல்தான்
சில மனிதர்களும்
இருப்பதை கொண்டு
சந்தோஷம் கொள்ளாமல்
பறந்து செல்வதை பிடிக்க
ஆசைப்பட்டு கையில்
இருப்பதை இழந்து விட்டு
கவலை கொள்கிறார்கள்... !!
--கோவை சுபா