நேரம் கிடைத்தால்

நேரம் கிடைத்தால்
நூலகம் போ..
புத்தகம் எடு..
புறப்பட்டு..

கண்ணாடியை பார்..
உன்னிடம் பேசு..
பயணப்பட்டு..

வானம் பார்..
பறவைக்கு விருந்தளி..
புகைப்படம் எடு..

கடற்கரை போ..
காற்று வாங்கு..
கண்ணாமூச்சியாடு..

கண்டுபிடி
உன்னுள் நீ தொலைத்த
உன்னை ..

கிடைத்தால் கொண்டாடு
கிடைக்காமல் போனாலும்
கவலைப்படாதே
மீண்டும் நூலகம் போ..
புத்தகம் எடு..

எழுதியவர் : அசோக் - கோவை (5-Nov-20, 12:50 pm)
சேர்த்தது : Ashok
Tanglish : neram kidaithaal
பார்வை : 341

மேலே