நினைத்த போதெல்லாம்

உழவர்
நினைத்த போதெல்லாம்
நீர் தர -
மழை வருவதே இல்லை.
மழை வருவதே இல்லை
என்பதை நினைத்த போதெல்லாம்
நீர் தர -
மறுத்ததே இல்லை
அவர்தம் கண்கள்.

- தீ.கோ.நாராயணசாமி.

எழுதியவர் : தீ.கோ.நாராயணசாமி (5-Nov-20, 8:31 pm)
சேர்த்தது : தீ கோ நாராயணசாமி
Tanglish : ninaitha pothellam
பார்வை : 145

மேலே