அரசு

அரசு

நேரிசை ஆசிரியப்பா

அரசின் நோக்கம் மக்கள் சந்தோஷம்
அரசின் கண்ணோட் டம்தவ றுதல்கூடா
அரசு குற்றங் களையிருக் கிநசுக்கவும்
அராஜ கத்தைக் கொன்றழிக்க செய்தலாம்
அரசுடைக் கஜானா குறைந்துநி றையவேண்டும்
பாரபட் சம்கொள் ளாதிருக்க வேண்டும்
செங்கோல் வேண்டுமே கொடுங்கோல் வேண்டாம்
அதிகாரி களையும் கண்கா ணித்தல்
அரசுத் துரோகி தூக்கிட்டுத் தொங்கவேண்டும்
அரங்கில் வீதியின் நடுவில் தொங்கவேண்டும்
கூரும் குறியெய் தும்வீரரே படையாகும்
கூறும் பக்தியும் கலாச்சா ரவொழுக்கம்
நல்லமைச் சுநீதி நன்மக்கள்
நல்லறம் தழைக்க வாழ்ச்சி செய்தலாமே

.....

எழுதியவர் : பழனிராஜன் (9-Nov-20, 1:16 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 140

மேலே