தினம் வெந்நீரில் நனையும் என் இதயம் 555

***தினம் வெந்நீரில் நனையும் என் இதயம் 555 ***





மலரே...




மார்கழிமாத மாக்கோலம்
உன்வாசல் எங்கும் பூ கோலம்...



எனக்குள்
மணக்கோலம் போட்டு...

காத்திருக்கிறேன்
உன்னை நினைத்து...

நீ வாசலில் வைத்த
பூசணி பூ வாடிவிடுமடி...

உன்னை சுமக்கும் என்
இதயத்தை நீ வாட வைப்பது ஏனடி...

உன்னாலே மாகோலம்
போடா கற்று கொண்டேன்...

உன் மனதில்
குடியேற
வழி சொல்லடி...

மாக்கோலத்தில் விழுந்த
சில
மழைதுளிக்காக வருந்துகிறாய்...

உன்னை நினைத்து தினம்
தினம் வெந்நீரில் நனையும்...

என் இதயத்தை நீ
எப்போது உணர்வாய் கண்ணே...

அம்மி மிதிக்க
நான் காத்திருக்கிறேன்...

நாம் சேர்ந்து அருந்ததி பார்க்க
நீயும் வந்துவிடடி என்னருகில்.....


எழுதியவர் : முதல் பூ பெ.மணி (12-Nov-20, 6:00 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 350

மேலே