பணம் தின்னும் கழுகுகள்

உன்னைக்கண்டதும்
குவியும் கைகளும்
எழும் கால்களும்
பாசத்தால் அல்ல
பணத்திற்கு மரியாதை
இந்த புரிதல் உன் வசம்
இருந்தால்
அகக்கண் உணர்த்தும்
அடிவருடிகளை.

ஈயேன் என மறுத்துப்பார் அனைத்தும்
இழந்தேன் என நடித்துப்பார்
அற்ற குளத்து
அறு நீர்ப்பறவை போல்
ஒட்டுண்ணிக் கூட்டம்
உனை விட்டு ஓடும்
இல்லாதோர் இனங்கண்டு
உவந்தளிப்பது தவறில்லை
தர்மம் தலை மட்டும் அல்ல
குலமும் காக்கும்

தப்புக்கு தலையாட்டும்
தரங்கெட்ட கூட்டத்தை
அணை போடும் ஆற்றல்
அறிந்து நடந்தால்
வல்லூறுகளின் இடையூறின்றி
தடம் மாறாமல்
உயரே சென்று
உச்சம் தொடலாம்

எழுதியவர் : இவானா (17-Nov-20, 3:01 pm)
சேர்த்தது : இவானா
பார்வை : 109

மேலே