இயற்கை
நதியின் நீர்பருகி மாய்ந்தன ஆநிரை
நதியே நீர்நச்சானது எப்போது என்று
நதியிடம் நீதி கேட்க வந்தது
பசுஒன்று நதி கண்ணீர்விட்டது சொன்னது
பசுவே என்னை நச்சாகியது மானுடரே
இந்நச்சு என்னையும் வதைக்குதே என்செய்வேன்
என்றது பாவம் அந்நதி