இயற்கை

நதியின் நீர்பருகி மாய்ந்தன ஆநிரை
நதியே நீர்நச்சானது எப்போது என்று
நதியிடம் நீதி கேட்க வந்தது
பசுஒன்று நதி கண்ணீர்விட்டது சொன்னது
பசுவே என்னை நச்சாகியது மானுடரே
இந்நச்சு என்னையும் வதைக்குதே என்செய்வேன்
என்றது பாவம் அந்நதி

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (17-Nov-20, 5:49 pm)
Tanglish : iyarkai
பார்வை : 242

மேலே