தீராத காதல் மோகம்

நீயும் நானும் ஒன்றாக
சேர்ந்தால் புது உலகம் உருவாகும்
அங்கு நாமே முழுதாவோம்

கண்ணோடு கண்ணும் நெஞ்சோடு
நெஞ்சும் மோதி பார்ப்போம்
அந்த வலியை அனுபவிப்போம்

பேச்சுகள் வேண்டாம் பொறுமையும்
வேண்டாம் இருளான இரவில்
நம்மை தேடி தொலைந்துபோவோம்

ஏற்றம் பெரிதா இறக்கம் சரியா
தர்க்கம் செய்வோம் தாழம்பூ மணமாய்
அறை முழுவதும் வியாபித்திடுவோம்

உயிராய் தனித்து மெய்யாய்
இணைவோம் உயிர்மெய்க்கு
காவலாய் ஆயுதம் தாங்கிடுவோம்

துடிப்பாய் தொடர்ந்து துடிப்பில்
முடிப்போம் பெருமூச்சில் வேர்விடும்
பூக்களாய் கிளையில் பூத்திடுவோம்!!

எழுதியவர் : மேகலை (17-Nov-20, 11:55 pm)
சேர்த்தது : மேகலை
பார்வை : 408

மேலே