முதுமை சுமை அல்ல
முதுமை சுமை அல்ல
அவர்கள் துள்ளல்களில்
துளிர்கின்றன
முதுமையின் முதுகிலும்
இளமையின் இறகுகள்!
நீருற்றிச் செல்லும்
கடந்த கால நினைவுகளால்
அவர்கள் நிகழ்காலத்தின்
வேர்களில் தேங்கி நிற்கிறது
பசுமை!
அவர்கள் புன்னகைகள்
வரைகின்றன
பூகோளமெங்கும்
புள்ளியில்லா
பூக்கோளத்தை!
திசைகள் எட்டும்
திரையிட்டுக் கொள்கின்றன
நாணத்தில்
அவர்கள் குறும்பு கண்டு
குத்திட்ட வியர்வைக் கால்களை
மறைப்பதற்காய்!
இளமை பொழிந்து ஓய்ந்த பின்னும்
அலங்கரித்துக் கொண்டிருக்கிறது
அவர்கள் நட்பு வானை
வர்ணப்பிரிகை அடையா வானவில்!
அவர்கள் ஆடுகளத்தின்
அடித்தளமாகிப் போகிறது
தூரத்தைத் தொலைத்து
புவி புதைந்த வானம்!
சு.உமாதேவி