பிழை
அரும்பிய மொட்டு
மலரும் முன்னே
கசக்கி யெறியப்படுகிறது
கயவர்களின் காமத்திற்கு
சேர்த்து வைத்த கனவுகள்
சிதைகிறது விடியும் முன்
சதையுண்ணும் மனித
மிருகங்களால்.....
உயிர் பறிபோய்
சருகாகிய பின்னும்
உடலையும் விட்டு
வைப்பதில்லை
காமபேய்கள்
ஆறிலிருந்து அறுபது
வரை தொடர்ந்த
காமத்தின் பார்வை
பிஞ்சுகளிலும் நஞ்சை
கக்கும் விசமேறிய
மிருகமாய் மாறியது
அன்பின் வெளிப்பாடும்
அருவெறுப்பாகியது
உடல் திண்ணும்
வஞ்சகர்களால்...
தனிமையும் இருளும்
மனதை துரத்த
சட்டத்தின் இருட்டிலே
ஒளிந்து கொள்கிறான்
துரோகி...
கள்வனுக்கு காவலாய்
சில காவலும் காசுக்காக
கை கட்டி நிற்கிறது...
ஏழ்மை யெனும் இயலாமை
தன்னை தானே
தூக்கிலிட்டு தற்கொலை
செய்கிறது...
இவ்வன்கொடுமை
காட்டிலும் பெண்
சிசு கொலை மேல்
மனிதம் மறித்து
வஞ்சம் வாழ்கிறது...