அவன்

இளங்காலை வெய்யலில் கடற்கரை மணலில்
உளம் நிறைய உருண்டு படுத்து
பின்னர் கடலில் மூழ்கி குளித்து
கரை சேர்ந்து ஓரின்பம் காண ஆசை

இரவில் முழுநிலவின் தன்னொளியில்
இரவெல்லாம் உளங்குளிர அவளோடு கொஞ்சி
உறவாடி காதல் இன்பம் காண ஆசை

ஆறுமாதமாய் வீட்டில் பேட்டி பாம்புபோல
அடைந்து கிடக்கும் காளை ஒருவனின்
நியாயமான ஆசைகள்தான் இவை பாழும்
கொரோனா அவன் ஆசைகளுக்கு கட்டுப்போட்டு
பாவம் வீட்டில் அடைபட்டு அவன்
தனது அலுவலக வேலையில் கருமமே
கண்ணையிரமாய் இருக்கின்றான் (work from home!)

மாறுமோ இந்த சோகம் .... அவன் பாடும்
சோக கீதம் இதுவே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (24-Nov-20, 8:17 pm)
Tanglish : avan
பார்வை : 180

மேலே