நிலவு

நிலவோடு உறவாடத்தான் இந்த மண்ணின்
மானிடருக்கு எத்தனை ஆசை - மழலைப்பருவம்
முதல் தொடங்கி குமர பருவத்தில்
காதலுக்கு தெய்வமாய் தூதுவனாய் இத்தனையேன்
முதுமையிலும் நிலவே நேற்று குழந்தையாய்
என் தாயின் மடியில் உன்னைப் பார்த்தே
சோறுண்ட என் நிலையைப் பார் இன்று...
நீ அதே நிலவாய் யவ்வனத்தில் உலாவர
உன்னெதிரே நான் மூப்பில் உழன்று!
அதனால் தானோ நிலவே உன்னை
ஒரு தெய்வமென்றே வேதம் கூறுகிறது

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (24-Nov-20, 9:16 pm)
Tanglish : nilavu
பார்வை : 272

மேலே