கல்லறையில் கண்ட கிளிகள்
கொல்லப்பட்ட காதலர் கல்லறை அது
அமைதியான மாலைப்பொழுது
கொஞ்சும் வசந்த கால மாலைப்பொழுது
கல்லறை மேல் இரண்டு கிளிகள்
கொஞ்சி குலாவி காதலில் மிதக்க
ஓய்ந்தபின் இரைத்தேடி பறக்க
காற்றில் வந்தது ஓர் அமானுஷ குரல்
ஆண்-பெண் குரல் உரையாடல்
'காதலியே பயப்படாதே இனி நாம்
சுதந்திர பறவைகள் நம் காதலைப்
பிரிக்க இனி யார் உலர் இங்கு'
என்று..... கல்லறையில் ஒரு மெல்லிய அசைவு
பேசியது சுதந்திரம் தேடும் இறந்த காதலரா
இல்லை இறந்த அவர்கள் உயிர்
கிளியாய் மாறி சுதந்திரமாய்ப் பறந்து போனதோ !