பிஞ்சில் பழுக்கும் வாலிபர்

பிஞ்சு உள்ளங்கள் காயாகி கனியாய்
கனிந்திட வேண்டும் ஒருபோதும் பிஞ்சிலே
வெதும்பி பாழாகி போக கூடாது
இன்றைய சமுதாயத்தில் இளம் பிள்ளைகள்
சரியான சிக்ஷை இல்லாது ஏதேதோ
வேண்டியதும் வேண்டாததும் கணினி மூலம்
கற்று கற்றதன் பயன் அறியாது
மனம்போன போக்கில் அலைகிறார் நல்ல
குரு இல்லாது பெற்ற கல்வி வீண்தான்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (29-Nov-20, 2:32 pm)
பார்வை : 70

மேலே