காதல்

களை பறிக்க நீ போகையிலே
களத்துமேட்டுக்கு நானும் வந்தேன்
காட்டுல தான் நீ தேன் எடுக்கையிலே
உன் உதட்டுல நானும் தேன் உறிஞ்சினேன்
நீ நாவற்பழம் ருசிக்கையிலே
உன் நாவையும் தான் நா ருசிச்சேன்

உன் மாராப்பு விலகையிலே
என் மனசு ஏனோ துடிச்சிச்சிடி
மாலை மாத்தி மல்லுக்கட்ட
மனச ஏனோ பூட்டிவைச்சேன்

ஆலமரத்துப்பொந்துக்குள்ள
ஆளுக்கொரு கிளி வளத்தோம்
ஆண் கிளிய நீவளக்க
பெண் கிளிய நா புடிக்க
ஆண் கிளியோ கடிச்சிச்சிடி
பெண் கிளியும் பறந்துச்சிடி

உங்கப்பன் சேதி சொல்ல
பதறி போய் நா நின்னேனே
பவுசா தான் வந்து நின்னான்
பட்டணத்து மாப்பிள்ள

பழசையெலாம் நெனச்சுக்கிட்டு
பழைய கஞ்சி நா குடிக்க
பந்தகாலு நட்டாச்சுன்னு
பத்திரிக்கைய நீ நீட்ட
கத்தியால குத்தினாலும்
கலங்காம நின்னவண்டி

நீ சொன்ன வார்த்தையிலே
என்ரெண்டு கண்ணும் கலங்கிச்சிடி
-இணையத்தமிழன்

எழுதியவர் : இணையத்தமிழன் (1-Dec-20, 4:08 pm)
சேர்த்தது : Inaiyathamizhan
Tanglish : kaadhal
பார்வை : 217

மேலே